சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் வீர விளையாட்டு பயிற்சி
நிருபர்
March 14, 2021
சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் வீர விளையாட்டு பயிற்சி
<p><b>ஆழ்வார்திருநகரி அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் நடைபெறும் வீரவிளையாட்டு பயிற்ச்சி அனைவரும் பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு ஊராட்சி மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது</b>.<br></p><p>தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம், சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பம் மற்றும் கராத்தே விளையாட்டுகளை, பயிற்சியாளரும் ஆசிரியருமான குரும்பூர் ஸ்டீபன் கற்றுக்கொடுக்கிறார்.<br></p><p>வாரத்தில், சனி மற்றும் புதன்கிழமை இரு நாட்கள் இரவு ஏழு மணி முதல் தாமிரபணி நதிக்கரையோரம் நடைபெறும் இந்த வீர விளையாட்டு பயிற்சியை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி, பயன்பெற்று கொள்ளுமாறு சேதுக்குவாய்த்தான் ஊராட்சி மன்றம் சார்பாக அதன் தலைவர் சுதாசீனிவாசன் தலைவர் தெரிவித்துள்ளார்.<br></p>