<p><b>தட்டார்மடம் அருகே முதியவர் விஷம் குடித்து&nbsp; தற்கொலை செய்து கொண்டார்.</b><br></p><p>தட்டார்மடம் அருகேஉள்ள அழகப்ப்புரத்தைச் சேர்ந்தவர் சு.&nbsp; மகாராஜா (65). இவருக்கு மனைவி செல்லக்கிளி மற்றும் 2 ஆண் பிள்ளைகளும் , 3 பெண் பிள்ளைகளும் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில்&nbsp; இருந்து&nbsp; வருகின்றனர்.&nbsp;</p><p>இந்நிலையில், மகாராஜாவுக்கும் அவரது&nbsp; மனைவிக்கு கருத்து வேறுபாடு காரணமாக பிரச்னை இருந்துவந்ததாம். இந்நிலையில் திங்கள்கிழமை&nbsp; &nbsp;மனைவிக்கும் இவருக்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக வீட்டைவிட்டு வெளியே&nbsp; சென்றாராம். பின்னர்&nbsp; வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில்&nbsp; பெரியதாழை – மணபாடு சாலையில் மகாராஜா விஷம் குடிந்து மயங்கி கிடந்ததை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.</p><p>இதுகுறித்த புகாரின் பேரில்&nbsp; தட்டார் மடம்&nbsp; காவல் ஆய்வாளர் அனிதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>