<p><span style="font-family: sans-serif; font-size: 12.8px;">&nbsp;</span><b style="font-family: sans-serif; font-size: 12.8px;">18 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை நேரில் வழங்கினார். முதல்வர்&nbsp;</b><br></p><p><span style="font-family: sans-serif; font-size: 12.8px;">தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (24.11.2020) தலைமைச் செயலகத்தில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்த அந்தோணி செல்வராஜ் &nbsp; மகன் செல்வன் அ.அஜய் ஜோன்ஸ்க்கு கருணை அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில், கிராம உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினை வழங்கினார்.</span></p><p><span style="font-family: sans-serif; font-size: 12.8px;">தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22.5.2018 மற்றும் 23.5.2018 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட் &nbsp;தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா &nbsp;20 இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாயும் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஒன்றரை இலட்சம் ரூபாயும் &nbsp;முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட தமிழக முதல்வா்</span><br style="font-family: sans-serif; font-size: 12.8px;"><span style="font-family: sans-serif; font-size: 12.8px;">&nbsp;27.5.2018 அன்று உத்திரவிட்டப்படி, வழங்கப்பட்டுவிட்டது. மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவும் ஆணையிட்டிருந்தார்கள்.அதன்படி, தமிழக முதல்வா் 27.9.2018 அன்று மொத்தம் 18 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்கள்.</span><br style="font-family: sans-serif; font-size: 12.8px;"><br style="font-family: sans-serif; font-size: 12.8px;"><span style="font-family: sans-serif; font-size: 12.8px;">இந்நிலையில், இச்சம்பவத்தில் உயிரிழந்த அந்தோணி செல்வராஜ் என்பவரின் மகன் செல்வன் அஜய் ஜோன்ஸ், அரசு வேலை பெறுவதற்குரிய 18 வயதினை &nbsp;தற்போது எய்தியதால், அவருக்கு இன்று தமிழக முதல்வா், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் கிராம உதவியாளராக பணி புரிந்திட கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை வழங்கி &nbsp;ஆறுதல் கூறினார்.</span><br style="font-family: sans-serif; font-size: 12.8px;"><br style="font-family: sans-serif; font-size: 12.8px;"><span style="font-family: sans-serif; font-size: 12.8px;">தமிழக முதல்வரிடமிருந்து பணிநியமன ஆணையினை பெற்றுக் கொண்ட செல்வன் அஜய் ஜோன்ஸ், தனது குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நிதியுதவியும், அரசு பணிக்கான பணிநியமன ஆணையும் வழங்கியமைக்காக &nbsp;தமிழ்நாடு முதலமைச்சருக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார். இதன்மூலம், தமிழக முதல்வா் ஆணையின்படி, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் &nbsp;வாரிசுதாரர்கள் அனைவருக்கும் அரசுப் பணி வழங்கப்பட்டுவிட்டது.</span><br style="font-family: sans-serif; font-size: 12.8px;"><br style="font-family: sans-serif; font-size: 12.8px;"><span style="font-family: sans-serif; font-size: 12.8px;">இந்த நிகழ்வின்போது, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் &nbsp;கடம்பூர் ராஜு, தலைமைச் செயலாளர் சண்முகம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், மற்றும் அரசு &nbsp;உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.</span><br style="font-family: sans-serif; font-size: 12.8px;"></p>