திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர்
நிருபர்
April 16, 2022
திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர்
<p><b>திருநங்கைகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்</b>.</p><p>தமிழகத்தில் உள்ள திருநங்கைகளுக்கு திமுக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு உதவிகள் என பல சலுகைகளை வழங்கி வருகிறது.</p><p>திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் முக.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்த திருநங்கைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தேநீர் கொடுத்து உபசரித்து மரியாதை அளித்தார். </p><p>தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி அலுவலகத்தில் திருநங்கைகளை கௌரவிக்கும் வகையில் ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். </p><p>ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, மற்றும் கௌதம், சுதாகர், உள்பட பலர் உள்ளனர்.</p>