<p dir="ltr"><b>தூத்துக்குடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் இந்திய பிரதமர் மோடியின் படம் மறைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு பாஜக நிர்வாகிகள் சென்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</b><br></p><p dir="ltr">தூத்துக்குடியில் குரூஸ்புரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில்,&nbsp; நேற்றைய தினம் ( 4.6 .21 ) இந்திய பிரதமர் நாரேந்திர மோடியின் படம்&nbsp; மறைக்கபட்டு இருப்பதாக தூத்துக்குடி பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு&nbsp; தகவல் வந்துள்ளது.</p><p dir="ltr"><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/06/05/31622877440.jpg" style="width: 100%;"><br></p><p dir="ltr">அதனையடுத்து, வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் இன்<u>று (</u> 5.6.21 ) பாஜக மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமையில் கிழக்கு மண்டல தலைவர் சந்தனகுமார், வடக்கு மண்டல தலைவர் எஸ்.பி.எஸ் கனகராஜ் ,&nbsp; பொதுச் செயலாளர் வி.எஸ்.ஆர் பிரபு, மேற்கு மண்டல அமைப்பாளர் பாலமுருகன், மான்சிங், இசக்கி முத்து, பொய்சொல்லான், வெற்றி வேல் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.</p><p dir="ltr"><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/06/05/11622877439.jpg" style="width: 100%;"><br></p><p dir="ltr">தேர்தல் நடத்தை விதிமுறைக்காக பிரதமர் படம் மறைக்க பட்டு இருந்ததாதகவும், தற்போது அதனை சரி படுத்தி விட்டதாகவும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் வடபாகம் காவல் துறையினர் சார்பில் கூறப்பட்டது. இதனையடுத்து சமாதானம் அடைந்த பாஜக வினர் அங்கிருந்து கிளம்பினர்.</p><p dir="ltr"><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/06/05/21622877440.jpg" style="width: 100%;"><br></p><p> </p><p dir="ltr">பிரதமர் மோடியின் படம் மறைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற பாஜக நிர்வாகிகள் நிகழ்வால் சிறிது நேரம் அங்கு பரபரப்பாக கானப்பட்டது.</p>