கனிமொழி எம்பி குறித்து அவதூறு - நடவடிக்கை எடுக்க எஸ்பியிடம் திமுக வழக்கறிஞர்கள் மனு!
நிருபர்
May 04, 2022
கனிமொழி எம்பி குறித்து அவதூறு - நடவடிக்கை எடுக்க எஸ்பியிடம் திமுக வழக்கறிஞர்கள் மனு!
<p><b>கனிமொழி எம்பி குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி எஸ்பியிடம் திமுக வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்தனர். </b><br></p><p>தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக வழக்கறிஞர்கள் சாமுவேல் ராஜேந்திரன், குபேர், இளம்பரிதி, அந்தோனி, செல்வ திலக் ஆகியோர் அளித்த மனுவில், "தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி குடியிருக்கும் வீட்டை காலி செய்ய வேண்டும் இல்லையென்றால் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றும் அவதூறாக சாதிரீதியாக அவர் புகழுக்கும் மரியாதைக்கும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் காந்தி மள்ளர் என்பவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் சக்தி நடராஜன், முத்துச்சாமி உட்பட பலர் உடனிருந்தனர். </p>