தண்டோரா போட்டு அறிவிக்கவும்… தமிழக அரசுக்கு ராமதாஸ் அறிவுறுத்தல்
நிருபர்
May 27, 2021
தண்டோரா போட்டு அறிவிக்கவும்… தமிழக அரசுக்கு ராமதாஸ் அறிவுறுத்தல்
<div align="left"><p dir="ltr"><b>கொரோனா தடுப்பூசிகளின் நன்மை குறித்து தண்டோரா போடவும், அதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு முழு அளவில் தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.</b><br></p>
</div><div align="left"><p dir="ltr">தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் கொரோனாவால் மக்கள் உயிரிழந்து கொண்டிருக் கிறார்கள். எல்லா பகுதிகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதை தவிர்ப்பதற் காகவே கடுமையான ஊரடங்கு வலியுறுத்தப்பட்டது என்று சொல்லும் பாமக நிறுவனர் ராமதாஸ்,</p></div><p dir="ltr">
கிராம நிர்வாக அலுவலர்களின் ஏற்பாட்டில், கொரோனா தடுப்பூசிகளின் நன்மை குறித்து தண்டோரா போடவும், அதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு முழு அளவில் தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>
</p><p dir="ltr">தமிழ்நாட்டில் கொரோனாவை ஒழிக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை கட்டாயமாக்கவும், தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் தமிழக அரசின் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என்று அறிவிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.</p>