<p><b>தூத்துக்குடியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.</b><br></p><p>தாளமுத்து நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாராஜா தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, தூத்துக்குடி, காமராஜர் புரம் பகுதியில்,&nbsp; தூத்துக்குடி சங்கரபேரியை சேர்ந்த பாண்டி மகன் ராஜேந்திரன்(50), தூத்துக்குடி வெல்லன்&nbsp; குளியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் முருகன்(40), தூத்துக்குடி சமர் வியாஸ் நகரைச் சேர்ந்த மதுரை வீரன் மோகன் பலவேசம் (42) மற்றும் தாளமுத்து நகர் சன்னியாசி தெருவைச் சேர்ந்த மணிராஜ் மகன் வீரா (27)&nbsp; ஆகியோர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.<br></p><p>இதனையடுத்து , தாளமுத்து நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாராஜா வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்த சீட்டுக்கட்டுகளும் ரூபாய் 1,00,000 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.<br></p>