<p><b>வேடநத்தம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் சிறப்பாக வாதாடி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த அரசு வழக்கறிஞர் எல்லம்மாள் கிஸ்ஸிங்கருக்கு எஸ்.பி., அபிஷேக் குப்தா பாராட்டு தெரிவித்தார்.&nbsp;</b></p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்முறை மற்றும் கொலை வழக்கில், அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு தரப்பு சிறப்பு அரசு வழக்கறிஞராக எல்லம்மாள் கிஸ்ஸிங்கரை நியமித்து உத்தரவிட்டார்.&nbsp;</p><p><br></p><p>சமீபத்தில் இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளார். குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு அரசு தரப்பில் ஆஜராகி சிறப்பாக வாதாடியதை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்&nbsp; அபிஷேக் குப்தா பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்</p><div><br></div>