கிஷோர் கே.சாமி கைது!
நிருபர்
June 14, 2021
கிஷோர் கே.சாமி கைது!
<p dir="ltr"></p><p dir="ltr"><b>சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக கிஷோர் கே.சாமி மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.</b></p><div align="left"><p dir="ltr">சமூக வலைத்தளங்களில் பிரபலமானவராக அறியப்படும் கிஷோர் கே.சாமி என்பவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பத்திரிகையாளர்கள் குறித்து ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் தொடர்ந்து அவதூறாகவும் இழிவாகவும் பதிவிட்டு வந்ததாக தெரிகிறது.</p></div><div align="left"><p dir="ltr">இதுதொடர்பாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக ஐ.டி விங்க் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் கிஷோர் கே.சாமி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.<br>
</p>
</div><p>
</p><p dir="ltr"><br>
</p>