தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த புதிய எஸ்பி அபிஷேக் குப்தா!
நிருபர்
May 23, 2026
புதிய காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி கலந்துரையாடினார்.
<p>தமிழகத்தில் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களின் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பரவலாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.</p><p><br></p><p>இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக (SP) அபிஷேக் குப்தா ஐ.பி.எஸ். சமீபத்தில் நியமிக்கப்பட்டு, தனது பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.</p><p><br></p><p>இதனைத் தொடர்ந்து இன்று (23.05.2026), புதிய காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி கலந்துரையாடினார்.</p>