<p><b>தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 22.11.2025 முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.</b></p><p><b><br></b></p><p>இன்று (23.11.2025) பிற்பகல் 3 மணி நிலவரப்படி,&nbsp; மருதூர் அணைக்கட்டிலிருந்து&nbsp; சுமார் 15250 கன அடியும் , திருவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து சுமார் 11060 கனஅடி நீரும் வெளியேறி தாமிரபரணி ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது.&nbsp;</p><p><br></p><p>அதே போல், கோரம்பள்ளம் அணைக்கட்டில் இருந்து சுமார் 1000 கன அடி நீர் உப்பாத்து ஓடையில் திறந்து விடப்பட்டுள்ளது.</p><p><br></p><p>எனவே, மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள்,&nbsp; கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர&nbsp; கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக ஏரல் பாலத்திற்கு அருகிலும், ஆத்தூர் பாலத்திற்கு அருகிலும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.</p>