பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பாக மனித சங்கிலி போராட்டம்!
நிருபர்
November 30, 2021
பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம்
<p><b>பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தூத்துக்குடி பாஜக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது</b>.<br></p><p>பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. <br></p><p>இந்நிலையில், இன்று தூத்துக்குடி மாநகரில் உள்ள புதிய மாநகராட்சி அருகே தூத்துக்குடி மாவட்ட பாஜக ஒபிசி அணி மற்றும் அமைப்பு சாரா அணி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. </p><p>ஓபிசி அணி மாநில செயலாளர் விவேகம் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட தலைவர் தங்க பாண்டியன், அமைப்பு சாரா அணி மாவட்ட தலைவர் சித்திரைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.</p><p>பாஜக தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், வடக்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் வரவேற்று பேசினர். <br></p><p>போராட்டத்தில், எஸ்சி அணி மாநில செயலாளர் சிவந்தி நாராயணன், அமைப்பு சாரா பிரிவு மாநில செயலாளர் தேவகுமார், வணிகர் பிரிவு மாநில செயலாளர் சத்தியசீலன், வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சந்தனகுமார், மாவட்ட பொது செயலாளர் விஎஸ்ஆர் பிரபு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p>