விளாத்திகுளம் அருகே ஜாமீன் கையெழுத்திட்ட 2 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் : தூத்துக்குடி கோர்ட் உத்தரவு!
நிருபர்
March 27, 2025
போக்சோ வழக்கில் தொடர்புடையவர் தலைமறைவான நிலையில் அவருக்கு ஜாமீன் கையெழுத்திட்ட இருவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
<p><b>விளாத்திகுளம் அருகே போக்சோ வழக்கில் தொடர்புடையவர் தலைமறைவான நிலையில் அவருக்கு ஜாமீன் கையெழுத்திட்ட இருவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.</b></p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், தாப்பாத்தி இலங்கை மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் மணிவண்ணன்(27). இவர், போக்சோ வழக்கில் மாசார்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. </p><p><br></p><p>குற்றம் சாட்டப்பட்ட மணிவண்ணனுக்கு ஜாமீன் வழங்குவதற்காக அவரது உறவினர்கள் திவ்யா மற்றும் முனியம்மாள் ஆகிய இருவர் கையெழுத்திட்டனர். அதன் பேரில் ஜாமீனில் வந்த மணிவண்ணன், கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தாராம்.</p><p><br></p><p>இதனால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, அவரது ஜாமீன்தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாசார்பட்டி போலீசார் தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். </p><p><br></p><p>அதன்பேரில், நீதிபதி சுரேஷ், ஜாமீன்தாரர்கள் 2 பேருக்கும் தலா 15 நாள்கள் சிறை தண்டனை அல்லது தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் இருவரும் தலா ரூ.10 ஆயிரம் அபராதத்தை செலுத்தினர். இதனையடுத்து, அவர்கள் சிறை தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.</p>