ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் : திமுக ஆட்சியில் வாபஸ்
நிருபர்
February 05, 2021
ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் : திமுக ஆட்சியில் வாபஸ்
<p>ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையை அடுத்து, போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வாபஸ் பெறப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.<br></p><p>தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரம் சாலையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில், திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று பதிலளித்து வருகிறார்.<br></p><p>அப்பொழுது பொதுமக்களின் கோரிக்கை மனு ஒன்றிற்கு அவர் பதிலளிக்கையில், ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நேரில் வந்து பார்க்கவோ வருத்தம் கூட தெரிவிக்காதவர்கள் தான் தமிழக முதல்வரும், இந்திய பிரதமரும்.</p><p>திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில், பொதுமக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என தெரிவித்தார்.</p>