குறுக்குச்சாலையில் கடைகளில் சுகாதாரத்துறையினர் ரெய்டு : காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கடைக்காரர்களுக்கு அபராதம்!
நிருபர்
August 02, 2024
காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கடைக்காரர்களுக்கு அபராதம்!
<p><b>தூத்துக்குடி மாவட்டம், குறுக்குசாலை பகுதியில் உள்ள டீக்கடை, பலசரக்கு ஹோட்டல், பேக்கரி உள்ளிட்ட கடைகளில் இன்று சுகாதார ஆய்வாளர்கள் தேவசுந்தரம், காளிமுத்து, அருணாச்சலம் மானக் ஷா, கங்காதர் பாபு ஆகியோர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் ரெய்டு நடத்தினர்.</b><br></p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/08/02/11722598911.jpg" style="width: 100%;"><br></p><p>அப்போது காலாவதியான உணவு பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தது, தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் வைத்திருந்தது, பொது இடங்களில் புகைபிடித்தல் உட்பட 9 கடைகளின் உரிமையாளர்களுக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்தனர். மேலும், காலாவதியான பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.</p>