<p><b>தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில்,&nbsp; பொதுமக்களிடம் சிவில் சப்ளை தாசில்தார் ஞானராஜ் மனுக்களை பெற்றார்.</b><br></p><p>பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ஜுலை மாதத்திற்கான சிறப்பு முகாம் 13.07.2024 இன்று சனிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை, அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருந்தார்.</p><p>அதே போல், தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில்,&nbsp; பொதுமக்களிடம் சிவில் சப்ளை தாசில்தார் ஞானராஜ் மனுக்களை பெற்றார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/07/13/11720854206.jpg" style="width: 100%;"><br></p><p>இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் உள்ளிட்ட குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்படுகிறது.&nbsp;</p><p>மேலும், மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மேலும் இம்முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெறுகின்றனர்.</p>