<p><b>சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளரை கண்டித்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</b><br></p><p>சாத்தான்குளம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களின் தேர்வு நிலை, சிறப்பு நிலை , ஆண்டு ஊதிய&nbsp; உயர்வு, ஓய்வூதிய பலன்கள் வழங்குவதில் வேண்டுமென்றே காலதாமபடுத்தியும், பெண் ஆசிரியர்&nbsp; அலுவலகத்திற்கு வர அச்சமடையும் வகையில், பள்ளி கல்வித்துறைக்கும், அரசுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில்&nbsp; செயல்படும்&nbsp; அலுவலக கண்காணிப்பாளர் நீலநாராயணனை கண்டித்தும், அலுவலக தேக்கத்தை கண்டித்தும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சாத்தான்குளம் கிளை&nbsp; சார்பில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு&nbsp; கண்டன ஆர்ப்பாட்டம்&nbsp; நடந்த்து.&nbsp;</p><p>ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் அந்தோணி ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். மாவட்ட&nbsp; துணைத் தலைவர் தங்கராஜன் முன்னிலை வகித்தார்.&nbsp; வட்டார செயலாளர் அருள்ராஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சிவன், மாவட்டத் தலைவர் ஜீவா, மாவட்ட பொருளாளர் மாரிகணேஷ், ,பொதுக்குழு உறுப்பினர் முருகன்,&nbsp; முன்னாள் மாநில துணைத் தலைவர் பால்பாண்டி, , திருச்செந்தூர் வட்டார செயலாளர் தியாகராஜன், ஆழ்வார்திருநகரி வட்டார செயலாளர் மகேஷ் துரைசிங்,&nbsp; உடன்குடி வட்டார செயலாளர் மகாலிங்கம், , மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ்லின் விண்ணரசி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.</p><p>இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தங்ககுமார், பேச்சிமுத்து, முருகன், ஒய்வுபெற்ற வட்டார கல்வி அலுவலர் நம்பித்துரை, முல்லர், செல்வக்குமார், எபனேசர், உள்ளிட்ட ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.&nbsp; வட்டார பொருளாளர் அந்தோணி யூஜின் நன்றி கூறினார்.</p>