வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது!
நிருபர்
November 01, 2021
தூத்துக்குடியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
<div align="left"><p dir="ltr"><b><span style="font-size:16px" ;="">தூத்துக்குடியில் </span><span style="font-size:16px" ;="">வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.</span></b></p><p dir="ltr">
<span style="font-size:16px" ;="">தாளமுத்துநகர் மாதா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மகாராஜன் (42). இவர் தனது இரு சக்கர வாகனத்தை கடந்த 24.10.2021 அன்று தனது வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். அடுத்த நாள் காலையில் பார்க்கும்போது அந்த இருச்சக்கர வாகனம் திருடு போயுள்ளது.</span></p><p dir="ltr">
<span style="font-size:16px" ;="">இதனையடுத்து மகாராஜன் அளித்த புகாரின் பேரில் தாள முத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற் கொண்டு வந்ததில் தாளமுத்துநகர் ராம்தாஸ் நகரை சேர்ந்த சம்சுதீன் மகன் பீர் முகமது (21) என்பவர் மேற்படி மகாராஜனின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.</span></p><p dir="ltr">
<span style="font-size:16px" ;="">இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரண்யா வழக்கு பதிவு செய்து பீர்முகம்மதுவை கைது செய்து சிறையில் அடைத்தார்.</span></p></div>