<p><b>தூத்துக்குடி உதவி காவல் ஆய்வாளர் பாலுவின் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதியதவி மற்றும் குடும்பத்தில் ஒருவர்க்கு அரசு வேலை _எடப்பாடி பழனிசாமி</b><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் பாலு (56). நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பொது அந்த வழியாக "வாழவல்லான் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் மகன் முருகவேல் அவ்வழியாக&nbsp; குடிபோதையில் மினி லாரியை ஓட்டிவந்துள்ளார். </p><p>இதனையடுத்து, குடிபோதையில் இருந்ததால் காவல் ஆய்வாளர் பாலு வாகனத்தைப் பறிமுதல் செய்து முருகவேலை எச்சரித்து அனுப்பியுள்ளார்.<br></p><p>இதனால் ஆத்திரம் அடைந்த&nbsp; முருகவேல், மற்றொரு மினி லாரி மூலம் உதவி காவல் ஆய்வாளரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார்.இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பாலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.<br></p><p>இதையடுத்து, தலைமறைவாக&nbsp; உள்ள முருகவேலை 10&nbsp; தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், அவர் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் மாஜிஸ்ட்ரேட் சரவணக்குமார் முன்னிலையில்,சரண் அடைந்தார். உடனடியாக அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்ட நிலையில் அவர் பாளை சிறைக்கு&nbsp; அழைத்துச் செல்லப்பட்டார். </p><p>இதனையடுத்து உதவி காவல் ஆய்வாளருக்கு அரசு சார்பாக 50 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேளையும் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி&nbsp; உத்தரவிட்டுள்ளார்.<br></p>