<p><b>தூத்துக்குடி அருகே காவல் உதவி ஆய்வாளரை சரக்கு&nbsp; வாகனத்தை வைத்து மோதவிட்டு கொலை செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.&nbsp;</b><br></p><p>தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் கீழ தெருவை சேர்ந்தவர் பாலு (56). இவர் ஏரல் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.</p><p>இந்நிலையில், நேற்று இரவு ஏரல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த பொது அருகில் உள்ள உணவகத்தில் வாலிபர் ஒருவர்&nbsp; தகராறு செய்து கொண்டிருந்ததாகவும், பாலு அந்த வாலிபரை சத்தம்போட்டு அனுப்பியுள்ளார்.</p><p>பின்னர், பாலு இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக&nbsp; சென்றுகொண்டிருந்த பொது புரோட்டா கடையில் தகராறு செய்த வாலிபர் பாலு மீது லோடு வேனை ஏற்றியுள்ளார். இதில் கீழே விழுந்த பாலு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/02/01/11612151587.jpg" title="Vilasal news" style="width: 100%;"><br></p><p>இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஏரல் காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி துரை கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.<br></p><p>மேலும் சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது தொடர்பாக ஏரல் போலீசார் வழக்குப் பதிந்து, கொலை செய்த வாலிபரை 10 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.&nbsp;<br></p><p>கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது</p>