<p><b>தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்க வலியுறுத்தி மாணவ, மாணவிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்&nbsp; போராட்டத்தில் ஈடுபட்டனர்.&nbsp;<br></b></p><p>2017-2018 கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் பி.ஜாய்சன் தலைமையில் மாணவ, மாணவிகள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில்,&nbsp;<br></p><p>தமிழக அரசின் சார்பாக வருடம் தோறும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது.&nbsp;<br></p><p>ஆனால் 2017-2018 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு தற்போது வரை மடிக்கணினி வழங்கப்படவில்லை. ஆனால் 2018-2019 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே 2017-2018 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்க மாவடட் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.<br></p>