ஏரல் : அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது
நிருபர்
March 25, 2022
ஏரல் : அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது
<p><b>தூத்துக்குடி மாவட்டம், ஏரல், காவல்காடு, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சரவணன் (39) என்பவருக்கும் ஏரல் இடையர்காடு, வடக்கு தெருவை சேர்ந்த செல்லத்துரை மகன் கௌரிபாலன் (43) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.<br></b></p><p>இந்நிலையில் நேற்று (24.03.2022) சரவணன் இடையர்காடு, மெயின் ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கௌரிபாலன், சரவணனனிடம் தகராறு செய்து சாதி பெயரை சொல்லி திட்டி, சரவணனை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.<br></p><p>இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து கௌரி பாலன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.<br></p>