தூத்துக்குடியில் நள்ளிரவில் தனியார் ஆலையில் தீ விபத்து - உலர் பூக்கள் எரிந்து சேதம்!
நிருபர்
June 30, 2021
தூத்துக்குடியில் நள்ளிரவில் தனியார் ஆலையில் தீ விபத்து - உலர் பூக்கள் எரிந்து சேதம்!
<div align="left"><p dir="ltr"><b>தூத்துக்குடியில் நள்ளிரவுவில் தனியார் உலர் பூ உற்பத்தி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.</b><br></p></div><p dir="ltr">தூத்துக்குடி, தாளமுத்துநகர், சமீர் வியாஸ் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 66). இவர் நேரு காலனியில் உலர் பூ உற்பத்தி தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் நேற்று அதிகாலையில் திடீரென தீப்பிடித்து உள்ளது. </p><p dir="ltr">இதில் அந்த தொழிற்சாலையில் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டு இருந்த உலர் பூக்களில் தீப்பிடித்தது. தீ மளமளவென்று பரவியது. இதில் உலர் பூக்கள் மற்றும் உலர் பூ தயாரிக்க வைத்திருந்த ரசாயனம் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. ஆலையின் மேற்கூரையும் எரிந்து நாசமானது. </p><p>
</p><p dir="ltr">இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்த அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>