தூத்துக்குடியில் முருகப்பெருமான் குருபூஜையை முன்னிட்டு அன்னதானம்
நிருபர்
January 26, 2022
தூத்துக்குடி அன்னதானம்
<p><b>தூத்துக்குடியில் முருகப்பெருமான் குருபூஜையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது</b>.</p><p>ஆறுபடை வீடு கொண்ட முருகனின் பக்தர்கள் திருச்செந்தூர், திருத்தனி, பழனி, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, பழமுதிர்சோலை, உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.</p><p>இந்நிலையில் தூத்துக்குடி ஆன்மீக அமைப்பின் சார்பில் முருகப்பெருமானின் 85வது குருபூஜையை முன்னிட்டு சைவ வேளாளர் மடத்தில் 1000க்கும் மேற்பட்டோர்க்கு அன்னதானம் வழங்கப்பட்டது.</p><p>அன்னதானத்தை முன்னாள் கவுன்சிலர் இசக்கியம்மாள், பொன்கசமுத்துபிள்ளை ஆகியோர் துவக்கி வைத்தனர்.<br></p><p>நிகழ்ச்சியில், அதிமுக பகுதி இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம், வழக்கறிஞர் அணி துணைசெயலாளர் சரவணபெருமாள், தொழிலதிபர் ராஜ்குமார், பொன் லட்சுமணன், திமுக மாணவரணி துணைச்செயலாளர் சோமா, வட்டச்செயலாளர் கங்கா, மற்றும் மாரிமுத்து, கேபிள் மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p>