தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் கல்லூரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்பு: திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிருபர்
October 30, 2021
தூத்துக்குடியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வ உ சிதம்பரனார் கல்லூரியில் நடைபெற்றது.
<p><b>தூத்துக்குடியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வ உ சிதம்பரனார் கல்லூரியில் நடைபெற்றது.</b></p><p>ஆண்டு தோறும் அக்டோபர் 26-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.<br></p><p>இதையடுத்து, தூத்துக்குடி வஉசி கல்லுரியில் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு மற்றும் கல்லூரி இளைஞர் நலத் துறை சார்பாக வ.உ.சி கல்லூரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் நடைபெற்றது. <br></p><p><b>அப்போது அவர் பேசுகையில், </b>லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு. இளைஞர்கள் லஞ்சத்தை தடுக்க முன் வர வேண்டும். லஞ்சம் தொடர்பாக அறிந்தால், உடனடியாக மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்” என கூறினார்.</p><p>பின்னர், மாணவ மாணவிகள் அனைவரும் லஞ்சம் வாங்க மாட்டோம் என உறுதி மொழி எடுத்து கொண்டனர். லஞ்சத்தை குறித்து விழிப்புணர்வை மாணவ, மணவிகளிடையே நடித்து காட்டப்பட்டது..<br></p><p>இந்நிகழ்ச்சியில் வ.உ.சி கல்லூரி முதல்வர் வீரபாகு, ஆய்வாளர் சுதா, ஜெயசீலி மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>