<p dir="ltr"><span style="font-size:16px" ;=""><b>16 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டவர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.</b></span></p><p dir="ltr"> <span style="font-size:16px" ;="">விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி சூரநாயக்கன்பட்டி தெருவைச் சேர்ந்த கனேசன் மகன் தாமரை செல்வம் (23) என்பவர் நேற்று (31.10.2021)&nbsp; விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.</span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்கா அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்நிலைய பொறுப்பு ஆய்வாளர் கலா போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தாமரைச்செல்வனை கைது செய்தார்.</span></p>