<p><b>எட்டயபுரத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நகர செயலாளர் ராஜகுமார் உட்பட அதிமுகவினர் அண்ணாவின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.</b><br></p><p>பேரறிஞர் அண்ணாவின் 113து பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி&nbsp; பொருளாளரும், வடக்கு மாவட்ட செயலாளருமான&nbsp; கடம்பூர் செ.ராஜு மற்றும் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோரின் ஆலோசனையின்படி,</p><p>&nbsp;எட்டயபுரம் பேரூர் கழகம் சார்பில் அவரின் திருஉருவப்படத்திற்கு நகரச்செயலாளர் ராஜ குமார் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.</p><p>இந்நிகழ்வில், நகர அவைத்தலைவர் கணபதி, பொருளாளர் தங்கதுரை, மகளிர் அணி செயலாளர் செல்வி, வார்டு செயலாளர் சாந்தி, கருப்பசாமி உள்ளிட்ட அதிகமுகவினர் கலந்து கொண்டனர்.</p>