திருச்செந்தூர் மாசித் திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் - இந்து முன்னணி கோரிக்கை
நிருபர்
February 05, 2021
திருச்செந்தூர் மாசித் திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் - இந்து முன்னணி கோரிக்கை
<p><b>திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் மாசித் திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது</b>.<br></p><p>இது தொடர்பாக இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் தமிழக இந்து சமய அறநிலை துறைக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :<br></p><p>திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் மாசி திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவில், சுவாமி வீதி உலாவும் தேரோட்டமும் மிகவும் முக்கியமானது.<br></p><p>கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் காரணமாக கோவிலில் வழக்கமாக நடைபெறும் முக்கிய திருவிழாக்கள் அனைத்தும் பக்தர்கள் அனுமதி இன்றி பிரகாரத்தின் உள்ளேயே நடைபெற்றது. சுசீந்திரம் உள்ளிட்ட கோவில்களில் திருவிழாக்கள் பக்தர்கள் அனுமதியுடன் நடைபெறுகிறது.<br></p><p>அதேபோல், திருச்செந்தூரில் வருகிற 17-ஆம் தேதி தொடங்க உள்ள மாசித் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். வழக்கம்போல சுவாமி வீதி உலா நடைபெறவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.<br></p><p>மேலும் திருச்செந்தூர் ரதவீதிகளில் கடந்த 10 மாதமாக முடிவடையாமல் உள்ள சாலை பணிகளை திருவிழாவிற்கு முன்னதாக விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது<br></p>