<p></p><p></p><p>தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம்,&nbsp; முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஸ்ரீவைகுண்டம் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.</p><p>தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக பல்வேறு தரப்பினர் முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றன.</p><p>இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில்&nbsp; முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக&nbsp; ரூ.10 ஆயிரத்தை, மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜிடம், ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி தலைமையில், பொருளாளர் துரைராஜ், துணைச்செயலாளர் மாடசாமி, சொர்ணம் ஆகியோர் வழங்கினர்.</p>