<p><b>குடிநீர் தேவைக்காக கி.மீட்டர் தூரம் சென்று வரக்கூடிய அவலநிலை இருப்பதாக தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அலங்காரத்தட்டு மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்</b>.<br></p><p>தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 17 வது வார்டு கீழ அலங்காரத்தட்டு பகுதிகளில்,&nbsp; பொதுமக்கள் தங்களது&nbsp; வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பெற வைப்புத்தொகை செலுத்தி ஆண்டு கணக்கில் ஆன பின்பும் இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக சுமார் 3 கி.மீ தூரம் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.&nbsp;<br></p><p>இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு நேரிலும், பதிவுதபால் மூலமும்&nbsp; மனு அளித்து பல மாதங்கள் கடந்தும்&nbsp; இதுவரை மாநகராட்சி நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/06/21/11624287094.jpg" title="Vilasal news" style="width: 100%;"><br></p><p>மேலும்,&nbsp; மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம்&nbsp; இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுவீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி, குடிநீர் பிரச்சனயை தீர்க்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மற்றும் தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் மாநகரச் செயலாளரும், சமூக ஆர்வலருமான செல்வக்குமார் உள்ளிட்டோர் கோரிக்கை வைக்கின்றனர்.</p>