<div align="left"><p dir="ltr"><b>தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 176 பேர் கைது செய்யப்பட்டனர்.</b><br></p></div><div align="left"> <p dir="ltr">தூத்துக்குடி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறதா என்று காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். தொடர்ந்து சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். </p><p dir="ltr">மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மதுவிற்பனை செய்ததாக 176 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 ஆயிரத்து 992 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.6 ஆயிரத்து 590 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.</p></div>