<p><b>தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியர்&nbsp; செந்தில் ராஜை&nbsp; மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் மரியாதை நிமித்தமாக அதிகாரிகளுடன் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். வங்கி செயல்பாடுகள், கடன் வழங்குதல் குறித்து அவர்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.&nbsp;</b><br></p><p>&nbsp;தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பதவியேற்றவுடன் அதிகாரிகள்,&nbsp; பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர்,&nbsp; புதிய மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜை&nbsp; நேற்று ( 23.11.2020 ) பூங்கொத்து கொடுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.&nbsp;<br></p><p>மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சிவகாமி,&nbsp; பொது மேலாளர் வெற்றிவேலன்,&nbsp; முதன்மை வருவாய் அலுவலர் அருள் சேசு ஆகியோர் உடன் இருந்தனர். மத்திய கூட்டுறவு வங்கி செயல்பாடுகள் மற்றும் கடன் வழங்குதல் குறித்து ஆட்சியர் வங்கித் தலைவர் சுதாகரிடம் முழுமையாக கேட்டறிந்தார்.<br></p>