தூத்துக்குடியில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தியிருந்த வாகனங்களில் கண்ணாடிகள் உடைத்து சேதம்!
நிருபர்
June 13, 2021
தூத்துக்குடியில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தியிருந்த வாகனங்களில் கண்ணாடிகள் உடைத்து சேதம்!
<p><b>தூத்துக்குடியில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தியிருந்த கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</b><br></p><p>தூத்துக்குடி ராஜீவ் நகர், பர்மா காலனி நிக்கிலேசன் நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் முன்பு நிறுத்தி இருந்த கார், ஆட்டோ உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகளை நேற்று சில மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி யுள்ளனர். </p><p>இதனையடுத்து, காலையில் எழுந்து வீட்டின் முன் நிறுத்தியிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அதன் உரிமையாளர்கள் அதிர்ச்சி யடைந்தனர். பின்னர், வாகனங்களின் உரிமையாளர்கள் வாகனங்களை சேதப்படுத்திய சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். </p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/06/13/11623587816.jpg" style="width: 100%;"><br></p><p>புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் வேல்முருகன், உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் பைக்கில் வந்த 3 வாலிபர்கள் கற்களால் வீசி வாகனங் களை சேதப்படுத்தியது தெரியவந்தது.</p><p>இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p><br></p>