<p><b>குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனங்காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்ட இடத்திலிருந்த 20 லிட்டர் ஊரலை அழித்து, கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய கேஸ் அடுப்பு, கேஸ் சிலிண்டர் மற்றும் 2 பானைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.</b></p><p>தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசனிடம் கண்டுபிடித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.&nbsp;</p><p>அதனையடுத்து, ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர்&nbsp; ஜூடி, உதவி ஆய்வாளர்&nbsp; தாமஸ், ஸ்ரீவைகுண்டம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்&nbsp; ஜெகநாதன், தலைமைக் காவலர்கள்&nbsp; லட்சுமணன், தனிப்பிரிவு காவலர் சந்தோஷ் செல்வம், ஆகியோர் ரோந்து சென்றபோது இருவர் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர், அவர்கள் போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.</p><p>இத்தகவலறிந்த&nbsp; மாவட்ட&nbsp; &nbsp;காவல்&nbsp; &nbsp;கண்காணிப்பாளர்&nbsp; ஜெயக்குமார்&nbsp; சம்பவ இடத்தை பார்வையிட்டு சமமந்தபட்ட நபர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.</p><p>இதுகுறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலிருந்த 20 லிட்டர் ஊரலை அழித்து, கள்ளச்சாராயம் காய்ச்சு வதற்கு பயன்படுத்திய கேஸ் அடுப்பு, கேஸ் சிலிண்டர் மற்றும் 2 பானைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளச் சாராயம் காய்ச்சிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.</p>