<div align="left"><p dir="ltr"><b>தூத்துக்குடி&nbsp; மாவட்டத்தில் இன்று 882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்றால் 6 பேர் உயிரிழந்தனர்.&nbsp;</b><br></p></div><p dir="ltr">தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 882 பேர் கொரோனாவால் தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40542 ஆக அதிகரித்து உள்ளது. இன்று 914 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் குணமடைந்தவர் களின் எண்ணிக்கை 33,3284-ஆக உள்ளது.&nbsp;</p><p> </p><p dir="ltr">தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று கிசிச்சை பலனின்றி&nbsp;உயிரிழந் தனர். இதனால் மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 210 ஆக அதிகரித்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை மற்றும் வீடுகளில் 7011 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.&nbsp;<br></p>