தூத்துக்குடி வந்தடைந்த ஆக்சிஜன் ரயில் - டேங்கர் லாரிகள் மூலம் தென் மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது!
நிருபர்
May 17, 2021
தூத்துக்குடி வந்தடைந்த ஆக்சிஜன் ரயில் - டேங்கர் லாரிகள் மூலம் தென் மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது!
<div align="left"><p dir="ltr"><b>ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவில் இருந்து புறப்பட்ட ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று பிற்பகலில் தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.</b><br></p></div><p dir="ltr">நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க திரவ மருத்துவ ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தேவையைப் பூா்த்தி செய்வதற்காக, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கும் முயற்சியை தெற்கு ரயில்வே கடந்த மே 14-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. </p><p dir="ltr">இந்நிலையில், ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவில் இருந்து புறப்பட்ட அக்சிஜன் ரயில் இன்று பிற்பகல் 3.58 மணிக்கு தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்திற்கு வந்தது. இந்த ரயில் மூலம் 5 டேங்கர் லாரிகளில் 78.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட தென் மாவட்ட மருத்துவமனைகள், ஆக்சிஜன் நிரப்பும் மையங்கள், தட்டுப்பாடு உள்ள பகுதிக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.</p><p dir="ltr"><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/05/17/11621262692.jpg" style="width: 100%;"><br></p><p dir="ltr">இந்நிலையில், தென் மாவட்ட மருத்துவமனைகளுக்கு வழங்கிட வரப்பெற்ற 78.82 மெட்ரிக் டன் ஆக்சினை 5 டேங்கர் லாரிகள் மூலம் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தொழில் துறை தமிழ்நாடு மற்றும் பல தமிழ் பண்பாட்டு தொல் பொருள் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு<u>,</u> சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன்<u>,</u> மீன் வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>
</p><p dir="ltr">இந்நிகழ்ச்சின் போது, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.</p>