<p><b>கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் தமிழக முதல்வரிடம் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது</b>.&nbsp;<br></p><p>இது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி கே.வி.&nbsp; ராம மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:</p><p>தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இயங்கி வருகிறது. இந்நிலையில் வங்கியானது, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, வங்கியின் சார்பில், "முதல்வர் பொது நிவாரண நிதியாக" ரூ.3 கோடி வழங்கியுள்ளது,</p><p>தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை&nbsp; இன்று தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து, வங்கியின் தலைவர் ஏ.நிரஞ்சன் சங்கர், வங்கியின் இயக்குனர் டி.என்.நிரஞ்சன் கனி மற்றும் வங்கியின் சென்னை மண்டல மேலாளர் டி.ரமேஸ் ஆகியோர் ரூ.3 கோடிகளுக்கான காசோலையை வழங்கினர்.</p>