கொரோனா நிவாரண நிதிக்கு, 1 மாத சம்பளத்தை வழங்கிய ஆயுதப்படை காவலர்!
நிருபர்
May 11, 2021
கொரோனா நிவாரண நிதிக்கு, 1 மாத சம்பளத்தை வழங்கிய ஆயுதப்படை காவலர்!
<p><b>கோவையில் கொரோனா நிவாரண நிதிக்கு, தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கிய ஆயுதப்படை காவலருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.</b><br></p><p>கோவை மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 500-க்கும் மேலாக பதிவாகி வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.</p><p>இந்த நிலையில், கொரோனாவுக்கு எதிரான போரில் தனது பங்களிப்பை அளிக்கும் விதமாக கோவை மாவட்ட ஆயுதப்படையில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வரும் பாபு என்பவர், தனது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார்.</p><p>இதனையொட்டி, இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வரத்தினத்தை நேரில் சந்தித்து, தனது ஏப்ரல் மாத சம்பள தொகையான ரூ.34 ஆயிரத்து 474-ஐ பாபு வழங்கினார். முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாத சம்பளத்தையும், பாபு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்துக்கது.</p><p>தன்னலமின்றி தனது முழு சம்பளத்தையும் நிவாரண நிதிக்கு வழங்கிய ஆயுதப்படை காவலர் பாபுவை, மாவட்ட எஸ்.பி., செல்வரத்தினம் மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.</p>