<p><b>தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் சாதனைத் திட்டங்களை வீடுதோறும் கொண்டு செல்லும் நோக்கில், திமுக மகளிர் அணி சார்பில் 'வெல்லும்&nbsp;&nbsp;தமிழ்ப்&nbsp;&nbsp;பெண்கள்' என்ற மாபெரும் பரப்புரை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.</b></p><p><br></p><p>இதன் ஒரு பகுதியாக, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டையில் உள்ள தனியார் மஹாலில் இப்பரப்புரை தொடக்க விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.</p><p><br></p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2026/02/24/11771935450.jpg" style="width: 100%;"><br></p><p><br></p><p>இந்நிகழ்விற்கு, மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட&nbsp; செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்&nbsp; எம்.சி. சண்முகையா முன்னிலை வகித்தார்.</p><p><br></p><p>கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மகளிர் அணியின் பங்கு முக்கியமானது எனக் குறிப்பிட்டு, பரப்புரைக்குச் செல்லும் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.</p><p><br></p><p>இந்த நிகழ்ச்சியில், மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழுத் தலைவர் ஜெசி பொன்ராணி,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சாரதா பொன்னிசை, ஒட்டப்பிடாரம் தொகுதி 'வெல்லும்&nbsp;&nbsp;தமிழ்ப் பெண்கள்' பரப்புரை பொறுப்பாளர்&nbsp; மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும், மாவட்ட, மாநில நிர்வாகிகள், ஒன்றிய - பகுதி செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.</p>