<p><b>தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், அரசின் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு இலவச இ-பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.</b></p><p><br></p><p>சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ், நீண்ட கால கோரிக்கைகளை ஏற்று மொத்தம் 194 பயனாளிகளுக்கு இந்த இலவச இ-பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் கூட்டுடன்காடு, குமாரகிரி, கீழ தட்டாப்பாறை, உமரிக்கோட்டை, அல்லிகுளம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 194 பயனாளிகளுக்கும் இ-பட்டாக்களை நேரில் வழங்கினார்.</p><p><br></p><p>இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின்,&nbsp; ஒன்றிய திமுக செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர்கள் ஹரி பாலகிருஷ்ணன் நாராயணன், மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்&nbsp; சண்முகநாராயணன்,&nbsp; கல்லாத்தான், செல்வம், சேரந்தையன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.</p><p><br></p><p>மேலும், பட்டா பெற்ற பயனாளிகள் தமிழக அரசுக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் தங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.</p><p><br></p>