எப்போதும்வென்றான் அருகே சிறுவன் நீரில் மூழ்கி பலி!
நிருபர்
March 10, 2021
குளத்தில் குளித்த 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி
<p><b>எப்போதும்வென்றான் அருகே குளத்தில் குளித்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்</b>. <br></p><p>தூத்துக்குடி மாவட்டம் எப்போது வென்றான் அருகே உள்ள கீழ செய்தலை கிராமம், கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மகன் அகிலேஷ் (7). அங்குள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தான்.<br></p><p>இந்நிலையில், நேற்றைய தினம் அகிலேஷ் தனது அக்காவுடன் அங்கு உள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளான். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அச்சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.<br></p>