<p><b>ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைவெள்ள நீரை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா மேற்கொண்டார்.</b></p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2025/11/25/11764089990.jpg" style="width: 100%;"><br></p><p>ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குப்பட்ட ரஹ்மத் நகர் தெருக்கள், முத்தம்மாள் காலனி துடிசியா, டாக்டர் செல்வராஜ் மருத்துவமனை, ஆதிபராசக்தி நகர், வெங்கடேஸ்வரா அழகர் ஸ்டோர், KTC நகர், ஹவுசிங் போர்டு,&nbsp; ஓம் சாந்தி நகர், நேதாஜி நகர், ராம் நகர், அய்யனார் காலனி, கொத்தனார் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையாநேரில் சென்று மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை&nbsp; பார்வையிட்டார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2025/11/25/21764089990.jpg" style="width: 100%;"><br></p><p>மேலும் மின் மோட்டார் தேவைப்படும் இடங்களில் உடனடியாக மின் மோட்டார் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். தண்ணீரை வெளியேற்றுவதற்கு மின் மோட்டார்கள் தடையில்லாமல் இயங்கவும் வலியுறுத்தினார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2025/11/25/31764089990.jpg" style="width: 100%;"><br></p><p>இந்த ஆய்வின் போது மாநகராட்சி உதவி ஆணையாளர் முனீர் அஹமத்,&nbsp; உதவி பொறியாளர் ராஜேஷ்கண்ணன், திமுக பகுதி செயலாளர் சிவகுமார், துணை செயலாளர் வேல்முருகன், வட்ட செயலாளர் தெய்வேந்திரன் மாவட்ட பிரதிநிதி பூவேஷ்நாதன், அவைத்தலைவர் ராஜசேகர், பொறியாளர் அணி தர்மர், இளைஞரணி பத்மநாபன், மகளிரணி பௌஷியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>