<p>இயற்கைக்கு பிறகு படைப்பாற்றல் கொண்ட இறைவிகளுக்கு&nbsp;<br></p><p>மகளிர் தின கடைசி வாழ்த்து!&nbsp;</p><p>மெல்லினமே எப்போது வல்லினம் ஆவாய்!&nbsp;</p><p>பெண்கள் தினத்தை இன்று பெரிதாய்&nbsp;</p><p>கொண்டாடும்&nbsp;</p><p>எனதருமை சகாக்களே!</p><p>வலிகளை மட்டும் சுமந்து வந்த இனத்திற்கு&nbsp;</p><p>வழிகாட்டும் ஒருநாள்&nbsp;</p><p>வாக்குரிமை&nbsp;</p><p>வாழும் உரிமை&nbsp;</p><p>கல்வி பெறும் உரிமை&nbsp;</p><p>என தவழ்ந்து நடக்கும்&nbsp;</p><p>குழந்தை போல</p><p>நாம் கிடந்து தவிக்கையில்&nbsp;</p><p>நம் கரம் தொட்டு தூக்கி&nbsp;</p><p>உரிமைகள் பெற்று தந்த நீதிக் கட்சியும்,திராவிட இயக்கங்களும்</p><p>நம் வணக்கத்திற்கு உரியவர்கள்&nbsp;</p><p>தேவதாசி என்ற பொட்டு கட்டும் முறைக்கு&nbsp;</p><p>பாடை கட்டி ,தேவை என்றால் உங்கள் வீட்டு பெண்ணை அனுப்புங்கள் என்ற&nbsp; சட்டமன்றத்தில் குரல் எழுப்பிய சிங்கப் பெண்மணி டாக்டர்&nbsp; முத்து லட்சுமி ரெட்டியும் இன்று நினைக்கப் பட வேண்டும்&nbsp;</p><p>கோலம் போட&nbsp;</p><p>சமையல் செய்ய&nbsp;</p><p>குனிந்து பணிந்து&nbsp;</p><p>நடக்க கற்று தரும் அம்மாக்களே&nbsp;</p><p>இனியாவது கொஞ்சம் ரவுத் திரத்தையும் கற்று கொடுங்கள்&nbsp;</p><p>நாங்கள் போடுகின்ற உடைதான் பாலியல் அத்து மீறல்களுக்கு&nbsp;</p><p>காரணம் என வாய் கிழிய பேசிடும்</p><p>வக்கிர புத்திகாரர்களே</p><p>இரண்டு வயது குழந்தை என்ன உடை போட்டது ...</p><p>நிமிர்ந்த நடை&nbsp;</p><p>நேர்கொண்ட பார்வை&nbsp;</p><p>நிலத்தில் எவருக்கும் அஞ்சாத நெறி&nbsp;</p><p>இனி காகிதத்தில் மட்டும் அல்ல&nbsp;</p><p>நம் கருவிலேயே ஊட்டப் பட வேண்டும் ..</p><p>சீதை களாய் இருந்து நெருப்பில் இறங்கி நிரூபித்தது போதும்&nbsp;</p><p>கண்ணகியாய் மாறி&nbsp;</p><p>கடைக் கண்ணால்&nbsp;</p><p>எரித்து விடுங்கள்&nbsp;</p><p>ஒடுக்கப்பட்டு மரணம் எய்திய அனிதா க்களும்&nbsp;</p><p>நிராகதியாய் மரணித்த நிர்பயாக்களும்&nbsp;</p><p>கடைசியாக இருக்கட்டும்&nbsp;</p><p>இந்த மண்ணின் கடைசி ஆணுக்கும் நம் மகத்துவம் தெரியும் வரை கொண்டாடி தீர்ப்போம்&nbsp;</p><p>மகளிர் தினத்தை&nbsp;</p><p>மெல்லினமாக அல்ல&nbsp;</p><p>வல்லினமாக !</p><p><b>ஜா.ஜான் சுந்தர ராஜா</b></p>