<p><b>தூத்துக்குடி மாநகரில் உள்ள சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் வளாகத்தில் தேங்கிய மழைநீர் மற்றும் செடிகளால் மாணவர்களின் பாதுகாப்பும், சுகாதாரம் கேள்வி குறியாகி உள்ளது. ஆகவே, அப்பகுதிகளை தூய்மை படுத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.</b></p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2025/03/24/21742825368.jpg" style="width: 100%;"><br></p><p><b><font color="#ce0000">இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் எம்.கிஷோர்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-</font></b></p><p><br></p><p>தூத்துக்குடி மாநகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியான சி.வ அரசு மேல்நிலைப் பள்ளியில் நீண்ட காலமாக தண்ணீர் தேங்கிய நிலையில் நோய் தொற்று வரும் அபாயம் உள்ளது, 6 அடி உயரத்திற்கு மேல் கோரை புல்கள் மற்றும் ஊர்வன  ஜந்துக்களால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். </p><p><br></p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2025/03/24/11742825366.jpg" style="width: 100%;"><br></p><p><br></p><p>ஆகவே மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பாக வலியுறுத்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>