காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டர் - பாதுகாப்பு படையினர் அதிரடி!
நிருபர்
February 19, 2021
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டர் - பாதுகாப்பு படையினர் அதிரடி!
<p><b>ஜம்மு காஷ்மீர் ஷோபியான் மாவட்டம் பட்கம் பகுதியில் பாதுகாப்பு படையினர், போலீசார் இணைந்து 3 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்</b>.</p><p>ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை பகுதி மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி வாலாட்டி வருகின்றனர். இதேபோல் பயங்கரவாதிகளும் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி செய்து வருகின்றனர். நமது பாகாப்பு படையினர் அவர்களின் முயற்சிகளை முறியடித்தது வருகின்றனர்.<br></p><p>இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் பட்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர், போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.<br></p><p>பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடி பொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இறந்த 3 பேரும் லஸ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது.<br></p><p>துரதிருஷ்டவசமாக பயங்கரவாதிகள் தாக்குதலில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.மற்றொரு போலீஸ் அதிகாரி காயம் அடைந்தார்.<br></p>