<p><b>எப்போதும்வென்றான் அருகே 6வது வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் தடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</b></p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் அருகில் உள்ள ஆதனூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகள் மாலதி (11). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6 வது வகுப்பு படித்து வருகிறார். இவர் அடிக்கடி அரிசி சாப்பிடுவாராம். அரிசி செரிமானம் ஆகாமல் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><br></p><p>இதையடுத்து கடந்த 27ம் தேதி அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) நவநீத கிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.&nbsp;</p>