தூத்துக்குடி அருகே காா் மோதி பாதயாத்திரை பக்தா் பரிதாபமாக உயிரிழப்பு!
நிருபர்
December 28, 2024
தூத்துக்குடி அருகே காா் மோதி பாதயாத்திரை பக்தா் பரிதாபமாக உயிரிழப்பு!
<p><b>தூத்துக்குடி அருகே காா் மோதியதில் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் பரிதாபமாக உயிரிழந்தார். </b></p><p><br></p><p>தூத்துக்குடி பூபால்ராயபுரத்தை சோ்ந்தவர் பால்ராஜ் (41). மீனவரான இவா் தனது உறவினா்களுடன் நேற்று இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றாா். அப்போது, தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஜெகவீரபாண்டியபுரம் விலக்கு பகுதியில் சென்ற போது, திருச்செந்தூரில் இருந்து மதுரை சென்ற காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். </p><p><br></p><p>இதுகுறித்து தகவல் அறிந்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீஸாா், பால்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><p><br></p><p>மேலும், இந்த விபத்து குறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து காா் டிரைவரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் அருகே உள்ள தின்னூரை சோ்ந்த கணேஷ்குமாா் (53) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>