<p><b>சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து இடையேயான போட்டிக்கு வந்த ரசிகர்கள் வலிமை அப்டேட் பதாகைகளுடன் வந்ததோடு, மைதானத்தில் முழக்கமிட்டதால் அறிக்கை வாயிலாக நடிகர் அஜித் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.</b><br></p><p>வலிமை படம் முன்னரே அறிவித்தப்படி செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருந்தால் தான் சமூகத்தில் நம் மீது மரியாதையை கூட்டும்.&nbsp;<br></p><p>இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.<br></p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/02/15/11613401850.jpg" title="Vilasal news" style="width: 100%;"><br></p><p>முன்னதாக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து இடையேயான போட்டிக்கு வந்த ரசிகர்கள் வலிமை அப்டேட் பதாகைகளுடன் வந்ததோடு, மைதானத்தில் முழக்கமிட்டனர். சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டு ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்தனர்.</p>