தூத்துக்குடியில் படுஜோராக நடைபெறுகிறதா தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை?
நிருபர்
December 09, 2024
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
<p><b>தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் முத்து கோரிக்கை விடுத்துள்ளார். </b></p><p><b><br></b></p><p><b style="color: rgb(206, 0, 0);">இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</b></p><p><br></p><p>தூத்துக்குடி மாநகரில் சமீப காலமாக தடை செய்யப்பட்ட லாட்டரிசீட்டு பரவலாக பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஏழை, எளிய மக்கள் தினசரி வேலைக்கு சென்று கிடைக்கும் தங்களது ஊதியத்தின் பெரும் பகுதியை லாட்டரி சீட்டுக்கே செலவு செய்யும் நிலமை ஏற்பட்டுள்ளது. </p><p><br></p><p>இதனால், பொருளாதார ரீதியாக அந்த குடும்பம் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையீடு செய்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.</p>